முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை ஒப்பி லாத சமுதாயம் உலகத் துக்கொரு புதுமை-வாழ்க (பாரத)
சரணங்கள்
1. மனித ருணவை மனிதர் பறிக்கம் வழக்கம் இனியுண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ-புலனில் வாழ்க்கை இனியுண்டோ?-நம்மி லந்த வாழ்க்கை இனியுண்டோ? இனிய பொழில்கள் நெடிய வயல்கள் எண்ணரும் பெருநாடு; கனியும் கிழங்கும் தானி யங்களும் கணக்கின் றித்தரு நாடு-இது கணக்கின் றித்தரு நாடு-நித்த நித்தம் கணக்கின் றித்தரு நாடு-வாழ்க! (பாரத)
2. இனியொரு விதிசெய் வோம்-அதை எந்த நாளும் காப்போம்; தனியொருவனுக் குணவிலை யெனில் ஜகத்தினை அழித்திடு வோம்-வாழ்க! (பாரத)
3. எல்லா உயிர்களிலும் நானே யிருக்கிறேன் என்றுரைத்தான் கண்ண பெருமான்;
எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை இந்தியா உலகிற் களிக்கும்-ஆம் இந்தியா உலகிற் களிக்கும்-ஆம் ஆம், இந்தியா உலகிற் களிக்கும்-வாழ்க! (பாரத)
4. எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம் எல்லாரும் இந்தியா மக்கள்,
எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர் விலை எல்லாரும் இந்நாட்டு மன்னர்-நாம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்-ஆம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்-வாழ்க (பாரத)